தியாகியிடம் உதவிபெற குவியும் மக்கள்!

தியாகி அறக்கட்டளை நிதியத்திற்கு இன்று புதன்கிழமை வந்த நூற்றுக்கணக்கான மக்களின் குடும்ப நிலைகளை ஆராய்ந்து அவர்களுக்கான நிதி உதவியை மாதாந்த கொடுப்பனவாக வங்கியின் ஊடாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பாடசாலை செல்லும் பிள்ளைகள், வசதி குறைந்த குடும்பங்களில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பயிலும் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்கள் என பல தரப்பட்டவர்களுக்கான நிதி வழங்கும் செயற்பாடுகள் நடைபெற்றன.

தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் நேரடியாக வருகை தந்து வங்கிக்கணக்குகளை ஆரம்பித்து வைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

இலங்கை இராணுவப் படைப்பிரிவின் அதிகாரிகளும் வந்து இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்த உதவியாக இருந்தார்கள்.

Recommended For You

About the Author: S.R.KARAN