மன்னம்பிட்டிய பஸ் விபத்தில் இரு பல்கலை மாணவர்கள் உயிரிழப்பு!

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்திருந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களுள் கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 9 பேரின் சடலங்கள் பொன்னறுவை வைத்தியசாலையிலும், ஒரு சடலம் மன்னம்பிட்டி வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த விபத்து தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor