திருமண மண்டபத்தில் புதுமண தம்பதிகள் மீது அசிட் வீசி தாக்குதல்!

திருமண மண்டபத்தில் புதுமணத் தம்பதிகள் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் பீகார் மாநிலத்தில் கடந்த 19-04 2023 திகதி இடம்பெற்றுள்ளது.

பீகாரில் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள அம்பாள் பகுதியில் புதன்கிழமை இரவு திருமண வைபவம் விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

அந்த வேளை 7 மணியளவில் திடீரென மின்சாரம் தடைபட்டுள்ளது.

அதனை சாதகமாக பயன்படுத்தி மணமகள் மற்றும் மணமகன் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் ஊற்றியுள்ளார்.

ஆசிட் வீச்சுக்கு இலக்கானதில் புதுமண தம்பதிகள் இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளதுடன் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor