மருமகளின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற மாமியார்!

இந்தியா- ஆந்திர மாநிலம் கொத்தா பேட்டை பொலிஸ் நிலையத்திற்கு மருமகளின் தலையை வெட்டிசென்ற மாமியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தாபேட்டை ராமாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மா.

இவருடைய மருமகள் வசுந்தரா (35). மாமியார் மருமகள் இடையே அடிக்கடி குடும்பத் தகராறுகள் நடந்து வந்தன. வசுந்தராவுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சுப்பம்மா சந்தேகப்பட்டார், அத்துடன் வசுந்தரா தனது குடும்பத்தின் சொத்தை அவரது பெயருக்கு மாற்றி விடுவார் என்றும் பயந்துள்ளார்.

இதனையடுத்து சுப்பம்மாவும் மற்ற உறவினர்களும் சேர்ந்து மதிய உணவு சாப்பிட வருமாறு கூறி வசுந்தராவை தங்கள் வீட்டிற்கு அழைத்து அங்கு வசுந்தரா கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் சரணடைவதற்காக சுமார் 6 கி.மீ தூரம் மருமகளின் தலையுடன் பொலிஸ் நிலையத்திற்கு சுப்பம்மா நடந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாமியரே மருமகளை அரிவாளால் வெட்டிய தகவல் வெளிச்சத்திற்கு வர, சுப்பம்மாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor