இன்று அதிகாலை ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

நானுஓயாவில் இன்று அதிகாலை ரயில் மோதி குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் நானுஓயா, கிலோசோ தோட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லதுரை சிறிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயில் மோதியே குறித்த குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

உயிர்ழந்தவரின் சடலம் தற்போது நானுஓயா புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor