நீராடச் சென்ற இரு மாணவர்கள் மாயம்!

இரத்தினபுரி, பலாங்கொடை பகுதியில் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆற்றில் நீராடச் சென்ற நான்கு மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிதிகல, வெலிஹரணாவ பிரதேசத்திலுள்ள நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள ஆற்றில் நீராடச் சென்ற நான்கு மாணவர்களில் இருவர் இவ்வாறு நீரில் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் 15 மற்றும் 17 வயதுடைய வெலிஹரனாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

உயிர்காக்கும் பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor