குடும்பத்தகராறு ஒன்றினால் தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதி!

குடும்ப தகராறில் கத்தியால் குத்தப்பட்ட தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கட்டுபெத்த பகுதியில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டுபெத்த பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor