மானிப்பாய் ஆலயம் ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட உதவி பூசகர் உட்பட இருவர் கைது!

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை மூத்தவிநாயகர் ஆலயத்தில் பித்தளை பொருட்கள் திருடப்பட்டப்பட்டமை தொடர்பில் நேற்று (10.04.2023) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆலய உதவி பூசகரும், இரும்பு வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த திருட்டு சம்பவத்தில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பித்தளை விளக்குகள் உட்பட பித்தளை பொருட்கள் என்பன திருடப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கைகள்

இந்நிலையில் திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றி சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor