யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 18 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் (10-04-2023) பருத்தித்தித்துறை – புற்றளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,

வீட்டிலிருந்து வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்திக்கொண்டு சென்றபோது அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்த இரு சிறுவறும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு உள்ளான இரு சிறுவர்களுக்கும் 14 மற்றும் 17 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor