புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளின் விலை அதிகரிப்பு!

இந்த புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளின் விலை சுமார் 40% அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சந்தையில் ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பலமாக காணப்பட்ட போதிலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் சந்தையில் ஏனைய உணவுப் பொருட்கள், உடைகள் மற்றும் இதர பொருட்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor