விவசாயத்துறை அரச ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தடை!

விவசாயத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் நீண்டகாலத்துக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்குவதில்லையென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயத் துறையை வீழ்ச்சியடையச் செய்யும்

அதிகாரிகள் இந்தத் தீர்மானத்துக்கு உட்பட்டவர்களென, அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நீண்ட காலம் வெளிநாடுகளுக்குச் சென்றால் அது நாட்டின் விவசாயத் துறையை வீழ்ச்சியடையச் செய்யுமெனவும், அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor