வவுனியாவில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!

வவுனியாவில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபாய் நட்டஈடும், கட்டதவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை இன்றைய தினம் (04.04.2023) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் 2012ஆம் ஆண்டு மாசி மாதம் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சமுதாய கலாசார விழுமியங்கள் அனைத்தையும் சீரழித்து 16 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு புரிந்து குழந்தை ஒன்று பெறுவதற்கு காரணமாய் இருந்த சிறுமியின் தந்தையின் சகோதரியின் கணவரான மாமா முறையிலான குற்றவாளிக்கே மேற்படி தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

மரபணு பரிசோதனை அறிக்கையின் படி, பிறந்த ஆண்குழந்தையின் விஞ்ஞான ரீதியிலான தந்தை குற்றவாளியான மாமன் தான் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இன்று வவுனியா மேல் நீதிமன்றினால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor