பூமணி அம்மா அறக்கட்டளையினரின் நிதி உதவி ஊடாக யாழ் சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!

விளையாட்டு முற்றம் புனரமைப்பு.!யாழ் சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றமானது மாணவர்கள் பாவிக்க முடியாமல் நீண்ட காலமாக பழுதடைந்து செயற்படாமல் இருந்த நிலையில் மாணவர்களின் பாவனைக்காக குறித்த விளையாட்டு முற்றத்தினை புனரமைத்து அதற்குரிய விளையாட்டு உபகரணங்களையும் பொருத்தி தருமாறு பாடசாலையின் அதிபர் திரு V.சிவாகரன் அவர்கள் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளாகிய எம்மிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய,எமது அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் நிதி ஏற்பாட்டில் ரூபா ஒரு லட்சத்து முப்பத்திரெண்டாயிரம் செலவில் விளையாட்டு முற்றம் அமைத்து பாடசாலை சமூகத்திடம் இன்று கையளிக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் V.சிவாகரன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பூமணி அம்மா அறக்கட்டளையின் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம் அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டு முற்றத்தினை கையளித்து சிறப்புரையாற்றினார்.

மேலும் இன்றைய நிகழ்வில் அறக்கட்டளையின் ஆலோசகர், இ.மயில்வாகனம்,அறக்கட்டளையின், கல்விப்பிரிவு பொறுப்பாளர் அதிபர் க.சசிதரன்,நிர்வாகசபை உறுப்பினர், சா.தவசங்கரி மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க,செயலாளர் திருமதி சியாமளா சுதர்சன்,பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க உப பொருளாளர் திருமதி ஜெயந்தினி சற்குணலிங்கம்,சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் கோவில் பூசகர் மங்களேஸ்வரசர்மா,மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: webeditor