எரிபொருள் விலையில் ஏற்பட இருக்கும் மாற்றம்!

உலக சந்தையில் அடுத்த சில வாரங்களுக்குள் மசகு எண்ணெய் விலை பெருளவான சதவீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிபொருள் விலை திடீரென பாரியளவில் குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை உணர்வதாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, எரிபொருளின் விலை சுமார் 20 வீதத்தால் குறையும் என குறித்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இதனால் இலங்கையிலும் எரிபொருள் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பிறகு மசகு எண்ணெய் விலை இந்தளவு வீழ்ச்சியடையவுள்ளமை இதுவே முதன்முறை எனவும் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor