டிக்டொக் காதலனை தேடி சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்

யாழில் டிக்டொக் செயலி மூலம் காதல் வயப்பட்டு சிறுமியொருவர் காதலனை சந்திப்பதற்கு தேடி சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அச் சிறுமி திருகோணமலைக்குச் சென்று அங்கு அநாதரவாக விடப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் அண்மையில் பதிவாகியுள்ளது.

காதலனைச் சந்தித்தல்
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி ரிக்ரொக் செயலி மூலம் மலர்ந்த காதல் காரணமாக காதலனைச் சந்திப்பதற்கு திருகோணமலைக்குச் சென்றுள்ளார்.

அங்கு காதலன் வருகை தராத நிலையில் அநாதரவாக சிறுமி மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான காதலனை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor