உறவினரின் மரண வீட்டிற்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்

உறவுக்காரரின் மரண வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் உணவு எடுத்துச் சென்ற நபர் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று (10) இடம்பெற்றது.

படி ரக வாகனம் மோதி விபத்து
உயிரிழந்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது படி ரக வாகனம் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்து குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் வாழைச்சேனை, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான முருகன் என்பவர் ஆவார்.

தங்க நகை ஒட்டும் வியாபாரியான அவர், தனது உறவுக்காரரின் மரண வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் உணவு எடுத்துச் சென்றபோதே விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் படி ரக வாகனத்தின் சாரதியை கைதுசெய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor