யாழில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணம் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை யாழ்.இணுவில் பகுதியில் கைது பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.

அதனையடுத்து வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சாவகச்சேரி பொலிஸார் இணுவில் பகுதியில் வீடொன்றில் பதுங்கியிருந்த மூவரை கைது செய்துள்ளதோடு களவாடிய பொருட்களையும் மீட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கைது செய்யபட்டவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor