பாதசாரி கடவையில் தொலைபேசியில் பேசிக்கொண்டு சென்ற நபரின் காதைக் கடித்த நபர்

வீதியைக் கடக்கும் வேளையில் பாதசாரி கடவையில் வைத்து, கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரின் காதை மற்றொரு நபர் துண்டித்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பதுளை – மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08-03-2023) இடம்பெற்றுள்ளது.

பாதசாரி கடவையின் நடுவில் வைத்து தனது கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்குப் பதிலளித்தமையால், கோபமடைந்த அதே பாதசாரி கடவையை கடந்த மற்றுமொரு நபர், தாம் வைத்திருந்த கத்தியினால் அவரின் காதை துண்டித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் விசேட தேவையுடையவர் என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட தேவையை கொண்டவரின் காதை துண்டித்தவர், அவரை நிலத்தில் வீழ்த்தி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor