யாழில் இராணுவத்தினருக்கு இடையூறு ஏற்ப்படுத்திய இரண்டு இளைஞர்கள் கைது!

யாழில் துவிச்சக்கர வண்டியில் ரோந்தில் சென்ற இராணுவத்தினரின் மீது, மதுபோதையில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை குறுக்கே விட்டு இடையூறு விளைவித்துள்ளனர்.

இச்சம்பவம் யாழ். நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கோப்பாய் சந்தியில் உள்ள இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவத்தினர் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரினால் பூதர் மடம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor