யாழில் தனியார் பஸ் நடத்துனரால் சொகுசு பஸ் நடத்தினர் மீது தாக்குதல்

இந்த சம்பவம் நேற்று இரவு 10:30 மணியளவில் யாழ்.சாவகச்சேரி நகரில் இடம்பெற்றுள்ளது.

யாழ் – கொழும்பிற்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ்ஸில் முற்பதிவு பதிவு செய்தவர்களுக்கு மேலதிகமாகப் பயணிகளை ஏற்ற முற்பட்டபோது பின்னால் வந்த யாழ். கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்துநருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.

இந்நிலையில் தனியார் சொகுசு பஸ் நடத்துநர் தாக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor