யாழ் சாவகச்சேரி பகுதியில் கணவன் வெளிநாட்டில் இருந்த நிலையில் கடத்தப்பட்ட குடும்ப பெண்

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இளம் குடும்பப் பெண் ஒருவர், குழந்தையுடன் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (20) பகல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலிருந்த 31 வயதான இளம் குடும்பப் பெண்ணும், 3 வயது குழந்தையுமே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் வந்த 4 பேர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து இளம் குடும்பப் பெண்ணை தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றியுள்ளதுடன், அழுதபடி சென்ற பிள்ளையையும் வாகனத்தில் ஏற்றப்பட்டது.

அதேவேளை பெண்ணின் கணவன் கனடாவில் வசிப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor