யாழில் வெளியூர் சென்று வீடு திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழப்பாணம் மாவட்டத்தில் உள்ள பகுதியொன்றில் ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து பெருமதியான நகைகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் யாழ். கோப்பாய் கட்டப்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளமை தொடர்பில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்றிரவு (19-02-2023) இடம்பெற்றதாக வீட்டின் உரிமையாளரான ஓய்வுபெற்ற ஆசிரியை முறைப்பாடு வழங்கியுள்ளார்.

குறித்த ஆசிரியை 2 நாட்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்ததாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தடயவியல் மற்றும் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor