உயிரிழந்த யாழ் பல்கலைகழக துணைவேந்தரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரின் இறுதிக்கிரியைகள் இன்று(21.02.2023) நடைபெறவுள்ளது.

அமரத்துவமடைந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

கைலாசபதி கலையரங்கத்தில் அஞ்சலி
கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி கிரியைகள் காலை 9.30 மணி முதல் மதியம் 11 மணி வரையில் நடைபெறவுள்ளது.

அதனையடுத்து அவரது பூதவுடல், அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மதியம் 11.30 மணியளவில் யாழ்.பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, மதியம் 1 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக இணுவில் கிழக்கு, காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor