சாதாரண தர பரீட்சை குறித்து வெளியாகியுள்ள செய்தி

2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் இணையம் ஊடாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெப்ரவரி 28 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 12.00 மணிக்குப் பிறகு இணையம் ஊடான நுழைவு நிறுத்தப்படும் என்றும், அதன் பிறகு எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் திகதி நீட்டிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் 0112785922/ 0112784208/ 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு வினவலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor