கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையால் இலவச மூக்கு கண்ணாடி வழங்கி வைப்பு

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் பொது மக்களுக்கான இலவச கண் பரிசோதனையும், மூக்குக் கண்ணாடி வழங்கல் நிகழ்வும் சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

பிரதேச சபையின் தவிசாளர் க.கமலநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சபை செயலாளர் ச.நவநீதன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல்லா ஹாரூன், சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சமூக அபிவிருத்திப் பிரிவு
மட்டக்களப்பு லியோ கழகம், லயன்ஸ் கழகம், வாழைச்சேனை குட்வில் தனியார் வைத்தியசாலை ஆகியவற்றின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டது.

குறித்த இலவச கண் பரிசோதனையும், மூக்குக் கண்ணாடி வழங்கல் நிகழ்வில் 400க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் கோறளைப்பற்று வாழைச்சேனை , கோறளைப்பற்று தெற்கு கிரான், கோறளைப்பற்று மத்தி ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த பொது மக்களும், அரச உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை பெற்றுச் சென்றுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor