முல்லைத்தீவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது

முல்லைத்தீவில் 15 வயது சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வாடி ஒன்றுக்கு பணிக்காக சென்றுள்ள திருகோணமலையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே நேற்று (3-01-23 ) கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்கு தெரியவந்ததையடுத்து, முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது, 15 வயதுடைய குறித்த சிறுமியுடன் இளைஞன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் தொடர்புடையவரான இளைஞன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறிய பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
முல்லைத்தீவில் அண்மைகாலமாக சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி வருகின்றமை அதிகரித்து காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor