யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் அதிரடி கைது!

யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் மற்றும் மருதனார் மடத்திற்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் சினிமா விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்த யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் 5 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin