மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நடிகை சமந்தா

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா.

இவர் மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அண்மையில் வீடு திரும்பினார்.

பின்னர் யஷோதா திரைப்பட ப்ரோமஷனுக்காக நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.

அவர் உடல் நிலை தேறிவிட்டது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Recommended For You

About the Author: webeditor