யாழில் மக்களிடம் மாட்டிய ராட்சத முதலை!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று இன்று காலை சாவகச்சேரி குடியிருப்பு வாழ் மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை இரண்டு நாய்களை உயிருடன் உட்கொண்டு விட்டு குறித்த விடுதியின் வளாகத்தில் உறங்கிய நிலையில் காணப்பட்டது

இந்நிலையில் சாவகச்சேரி பகுதி மக்களால் குறித்த முதலை பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளதோடு வனவிலங்கு பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு வனவிலங்கு பாதுகாப்புப் பிரிவினரால் குறித்த முதலை மீட்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: S.R.KARAN