கலாபூஷணம் சிவதாசன் எழுதிய ‘தென் யாழ்ப்பாணம்’ நூல் வெளியீடு

கலாபூஷணம் சி.சிவதாசன் எழுதிய ‘தென் யாழ்ப்பாணம்’ நூல் வெளியீட்டு வைபவமானது இன்று காலை யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையேற்று நடத்த பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயளாளர் இ. வரதீஸ்வரன் கலந்து கொண்டு, தென் யாழ்ப்பாணம் நூலை வெளியிட்டு வைத்தார்

இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், கலைத்துறை சார் ஈடுபாடுடையோர், பிரதேச செயலக அலுவலகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN