உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை அமைக்க திட்டமிடும் சவூதி அரேபியா

ஒரு ட்ரில்லியன் அமெரிக்கா டொலர் மதிப்பில் உலகின் உயரமான கட்டடத்தை அமைக்க சவூதி அரேபிய திட்டமிட்டுள்ளது.

சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஜீரோ கார்பன் நகரம் கனவுத் திட்டத்தில் தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில இரு கட்டடங்கள் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1600 அடி உயரத்தில் 75 மைல் தூரத்திற்கு இணையாக இரு கட்டடங்களும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய உலகின் பெரிய கட்டடமான புர்ஜ் கலீபாவை விட பெரிதாகவும் நவீன வசதிகளுடனும் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor