கொழும்பில் பத்து மணிநேர நீர் வெட்டு இன்று!

கொழும்பில் உள்ள பல பகுதிகளில் இன்றைய தினம் (10-12-2022) 10 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று முற்பகல் 10 மணி முதல் இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர் விநியோகம் அம்பத்தலை நீர்விநியோக நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக தடைப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவளை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், கொலன்னாவை நகர சபை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor