யாழில் சீரற்றகாலநிலையால் உயிரிழக்கும் கால்நடைகள் குறித்து பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன.

வீசிய பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும்
அதேவேளை யாழ். மாவட்டத்தில் 80ற்கும் மேற்பட்ட மாடுகளும் 20 தொடக்கம் 30ற்கு மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

மழையுடன் கூடிய குளிரான காலநிலை நிலவுவதால் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும் கால்நடை வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக நாய்கள் பூனைகள், கோழிகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள்மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் பாதுகாப்பான கொட்டில்களில் தங்க வைத்து குளிர் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor