யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இச் சம்பவம் யாழில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் பிரபல பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் தாக்கி உள்ளதால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த மாணவனை தடிகளால் பல முறை தாக்கிய ஆசிரியர் தடி முறிந்த நிலையில் தனது கையால் மாணவனின் நெற்றியில் அடித்துள்ளார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் கல்லூரியின் அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது சம்பவம் தொடர்பில் தான் அறியவில்லை எனவும் இது குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor