யாழ். கட்டுடையில் நிவாரணப் பணி!

யாழ்ப்பாணம் மானிப்பாய் கட்டுடை ஜே/ 140 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 22 வறிய நிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொருட்கள் நேற்று 18 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் – இலங்கை(ஐவுசு) பணிப்பாளருமான யாழ், தீவகம், வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா (பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் மேற்குறித்த பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானங்களைக் கொண்ட வறிய நிலை
22 குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபாய்ப்படி, 44 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள், பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார நிவாரண உதவிப் பணியாக, பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேச சபை சுன்னாகம், யாழ்.மாநகரசபை, வடமாகாண சபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோரால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

Recommended For You

About the Author: S.R.KARAN