யாழில் கோயில் பூசகர் ஒருவரின் தில்லுமுல்லால் அவரை வெளியேற்றிய ஆலய நிர்வாகத்தினர்

வீட்டுக் கிருத்தியத்தில் படைக்கப்பட்ட பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றை கோவில் பூசையில் பயன்படுத்திய பூசகர் ஆலய நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்ட சம்பவம் தென்மராட்சி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பூசகர் அவசர அவசரமாக கோவிலுக்குள் நுழைந்து பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றை பூசையில் வைத்துள்ளார்.

பூசகரின் நடத்தையில் சந்தேகமடைந்த பக்தர்கள் கோவில் மடப்பள்ளியை திறந்துள்ளனர். இதன்போது அங்கே எந்தவொரு சமையும் செய்யப்படவில்லை.

இதனையடுத்து பூசகரை அழைத்து விசாரித்தபோது தான் வீட்டுக் கிருத்தியத்தில் பயன்படுத்திய பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றை எடுத்துவந்து, கடவுளுக்கு படைத்ததை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினால் பூசகர் வெளியேற்றப்பட்டார்.

Recommended For You

About the Author: webeditor