வழக்கிலிருந்து பிரதிவாதிகள் விடுவிப்பு

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் தொடரப்பட்ட பிறிதொரு வழக்கில் இருந்தும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.... Read more »

யாழில் 86 கோடியே 45 இலட்ச ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் 86 கோடியே 45 இலட்ச ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை  காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று பொதிகள் காணப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ... Read more »
Ad Widget Ad Widget

சிஐடியினரால் கைது செய்யப்பட்ட சீன தம்பதி!

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கற்களுடன் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த சீன தம்பதியரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியிடம் இருந்து 175 மாணிக்கக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த மாணிக்கக் கற்களின் பெறுமதி 50 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக பொலிஸார்... Read more »

ஓய்வை அறிவித்தார் கிளாசென் தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட நட்சத்திரம் ஹென்ரிச் கிளாசென், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் அவர் ஒருநாள் மற்றும் டி:20 போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார். வரையறுக்கப்பட்ட ஓவர்கள் வடிவத்தில் தென்னாப்பிரிக்காவிற்காக ஒரு சிறந்த செயல்திறன் கொண்ட கிளாசென், தனது கிரிக்கெட்... Read more »

வடமராட்சி பகுதியில் 84 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – வல்லிபுரம் காட்டு பகுதியில் இருந்து 84 கிலோ கஞ்சா போதைப்பொருள் காவல்துறை விசேட அதிரடி படையினரால் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்த அதிரடி படையினர் ,... Read more »

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக சஜித் மனு தாக்கல்

மின் கட்டண அதிகரிப்பின் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இன்று (08) உச்ச நீதிமன்றில்... Read more »

பங்களாதேஷ் பிரதமரை வாழ்த்தினார் ஜனாதிபதி ரணில்

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராக பதவியேற்ற ஷேக் ஹசீனாவிற்கு (Sheikh Hasina) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரதமர்,ஷேக் ஹசீனாவின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவத்தைப் பாராட்டியுள்ள ஜனாதிபதி, அவரது அறிவும், அனுபவமும் பங்களாதேஷ் மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என்றும்... Read more »

இலங்கை வரலாற்றில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற பொங்கல் விழா

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1,008 பொங்கல் பானை, 1,500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வு இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் சாணக்கியன், சதாசிவம்... Read more »

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு: மூவர் கைது

மட்டக்களப்பு – காத்தான்குடி – புதுகுடியிருப்பு பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமையன்று (06)... Read more »

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் லசந்தவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று (08) காலை 10 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும்... Read more »