காதலியை கொடூரமாக கொன்ற நபருக்கு பொது மன்னிப்பு வழங்கிய ரஷ்ய அதிபர்!

காதலியை 111 முறை கத்தியால் குத்தி சித்திரவதை செய்து கொன்ற ரஷ்ய நபருக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் மன்னிப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ரஷ்ய நபர் உக்ரைனில் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, விளாடிமிர் புடின் மன்னிப்பு வழங்கியதாக தெரியவருகின்றன.... Read more »

இஸ்ரேல் காசா யுத்தத்தினால் இலங்கைக்கு பாதிப்புகள்

இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையிலான யுத்தம் தொடர்ந்து வருகின்றது. மத்திய கிழக்கில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டதைப் போன்றதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.... Read more »
Ad Widget

கொழும்பு பிரபல பாடகி வீட்டில் மர்ம நபர்

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் உள்ள பிரபல பாடகி நிரோஷா விராஜினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில்... Read more »

மட்டக்களப்பு தேரருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!

மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும். மட்டக்களப்பு விகாராதிபதியாக இருக்கும் அம்பிட்டிய தேரர் அவர்கள் தமிழ் மக்களை துண்டுதுண்டாக... Read more »

யாழில் உள்ள வளர்ப்பு நாய்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 3,983 வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்க்கான தடுப்பூசி மருந்து போடப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாண மாநகரப் பிரதேசத்தில் உள்ள 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலுமே... Read more »

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் புதிய தீர்மானம்!

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 15 வீதத்தை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமாக வைத்திருக்கும் போதிலும், இதுவரை எந்த... Read more »

கீரிச்சம்பா அரிசி தட்டுப்பாடு உண்மைக்கு புறம்பானது!

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாய அமைச்சர் மகிந்த அமர வீர தெரிவித்துள்ளார். நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் கிடையாது எனவும் அரிசி மாபியாக்கள் செயற்கையாக மேற்கொண்ட செயல்பாடுகளே சந்தையில் கீரி... Read more »

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த... Read more »

சவால் விடுத்துள்ள ஜனாதிபதி!

சமகால அரசாங்கத்தின் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துள்ளதாக சில ஆய்வு குழுவினர் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் பலமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அந்த ஆய்வுக் குழுவைப் பற்றி எனக்குத்... Read more »

தீபாவளி கொண்டாட்டத்திற்காக மதுபான நிலையம் சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் வாங்க சென்ற இருவரில் ஒருவர் டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காணாமல் போயுள்ளதாகவும் திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல்போன இருவரில் ஒருவர் நீர்வீழ்ச்சிக்கு கீழே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.... Read more »