மட்டக்களப்பில் தொடரூந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த தொடருந்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (25.03.23) தொடருந்து கடவையினை மறித்து மக்கள் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். சுவிஸ்கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை தொடருந்து கடவையினை கடக்கும் வீதி... Read more »

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பஸ் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (23-02-2023) 10 மணியளவில் சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார்... Read more »
Ad Widget

கோறளைப்பற்று தெற்கு கிரான் பகுதியில் காலைக்குள் கட்டப்பட்டிருந்த எருமை மாடுகள் இறைச்சிக்காக கொலை!

21/03/2023 நேற்றைய தினம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை மூக்குறம்குளம் பகுதியில் பண்ணையாளர் ஒருவரின் சோகம். அவர் தன்னுடைய எருமை மாடுகளை காலைக்குள் கட்டி விட்டு அவரது வீட்டுக்கு சென்றபோது காலையில் பட்டிக்கு வந்து பார்த்தபோது இனம் தெரியாத நபரால்... Read more »

பாவனைக்கு ஏற்றதாக அல்லாமல் காணப்படும் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டை பாதை

கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டை பாதை தற்போது பாவனைக்கு உகந்ததாக காணப்படவில்லை என கிழக்குமாகாண இயந்திரப் பொறியியலாளர் நேரடியாக பார்வையிட்டு வாய்மொழியாக கூறியுள்ளார். விரைவில் அறிக்கையிடுவதாகவும் கூறினார். கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வாகனங்களை பரீட்சித்து பார்ப்பதற்காகவும் மதிப்பீடு செய்வதற்காகவும் சபையினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு... Read more »

ஓட்டமாவடி பிரதேச சபையின் 60வது அமர்வில் உரையாற்றிய ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரன்

எமது வடமுனை மற்றும் வாகனேரி பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றம் குறித்த பல எதிர்பார்புக்களுடன் பிரதேச சபைக்கு வந்திருந்தோம் ஆனால் அவை நிறைவேறாத நிலையில் இன்று கலைந்து செல்கின்றோம் என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரன் தெரிவித்தார். ஓட்டமாவடி... Read more »

காத்தான்குடியில் இடம்பெற்ற கோட்ட மட்ட உதைப்பந்தாட்ட போட்டி

காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி சம்பியன் பட்டத்தைச் சூடியுள்ளதாக காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எம்.ஏ.நிஹால் அஹமட் தெரிவித்தார். காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் 16, 18, 20... Read more »

350 மில்லியன் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ள ஏறாவூர் பொதுச்சந்தை

ஏறாவூர் பொதுச்சந்தை ரூபா 350 மில்லியன் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றன. இதில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஏறாவூர் பொதுச்சந்தையை மீள நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுத்... Read more »

காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட முன்னாள் போராளி பற்றி சகோதரியின் கருத்து

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் கடந்த புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் போராளி தொடர்பான விடயங்கள் முற்றிலும் பொய் என அவரது குடும்பத்தினர் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.... Read more »

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் சாரதி உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் வயில் உழவில் ஈடுபட்ட உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதன் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (11-03-2023) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு... Read more »

பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து என்ற தொனிப்பொருளில் கண்டலடி கடற்கரையில் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வு

பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து’ என்ற தொணிப் பொருளில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று வாகரை கண்டலடி கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி திருமதி மயூரி ஜனனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க... Read more »