நாளாந்த வாழ்வில் எங்கள் உரிமைக்காகப் போராட்டிக் கொண்டிருக்கிறோம். – MSEDO நிறுவனத்தின் தலைவர்.(video)

“நாளாந்த வாழ்வில், தினமும், உணவுக்காகாவும், உரிமைக்காகவும், சுரண்டப்படும் எமது வளங்களுக்காகவும், காணாமல் போன உறவுகளைத் தேடியும்,போராடிக் கொண்டே இருக்கிறோம். “ என சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) தலைவர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார். இன்றைய தினம்  (10.12) செவ்வாய், காலை, உலக மனித... Read more »

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நீதிகோரிப் போராட்டம்(video)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒண்றினைந்து, இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்கையில், காணாமல் போனோரது்  புகைப்படங்கள்,பதாதைகள்,  மற்றும்மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, “வடக்கும்... Read more »
Ad Widget

உதிரம் வழங்கி உயிர் காப்போம்! மன்னார் தேசிய இளைஞர் படையணி அழைப்பு!

எதிர் வரும் (12.12) காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை மன்னார்,இரண்டாம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி வளாகத்தில் நடைபெறவிருக்கும்  மாபெரும் இரத்த தான முகாமில் கலந்து கொள்ளுமாறு,தேசிய இளைஞர் படையணியின் பொறுப்பதிகாரி கப்டன் சர்ராஜ் மன்னார்... Read more »

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு இந்திய மக்களின் நிவாரணம்.

அண்மையில் ஏற்றபட்ட சீரற்ற காலநிலையால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு இன்றைய தினம் (07.12) சனிக்கிழமை, யாழ், இந்திய  துணைத் தூதரினால், நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட 1655 பயனாளிகளில், முதற்கட்டமாக, மன்னார்... Read more »

“மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு” சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி.

யு.என். டி. பி. யின். அனுசரனையுடன் “மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின்”  ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனைப்  பகுதியில் அமைந்துள்ள பால் குளம் மற்றும் அதனை  அண்மித்த பகுதிகளில் சிரமதானப் பணி ஒன்று  முன்னெடுக்கப்பட்டது. மேற்படி சிரமதானத்தில்,  குளத்தைச் சுற்றிலும் காணப்பட்ட பிளாஸ்ரிக் மற்றும்... Read more »

தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு(04) கைது செய்யப்பட்ட மீனவர்களின் 02 படகுகளும் இதன்போதுகைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் இராமேஷ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே... Read more »

பொலிஸ் நிலைய சிறைக் கூண்டிலிருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்!

மன்னார், பேசாலை பொலிஸ் நிலையத்தில் கஞ்சா கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக் கூண்டிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) தப்பிச் சென்றுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச் சென்றவர் பேசாலை, பெரியகர்சல் பகுதியில்... Read more »

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் – செல்வம் எம்பி

இந்த வெள்ள அனர்த்தத்தில்  வன்னி  மாவட்டங்களான,  வவுனியா, மன்னார்,  முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள்  பாரியளவில்  பாதிக்கப்பட்டுள்ளது.  இதிலே பாதிக்கப்பட்ட  அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கப்பட  வேண்டுமென்று  வன்னி மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம்  அடைக்கலநாதன்,  அரசாங்கத்திடம்  கோரிக்கை. விடுத்துள்ளார். இன்றைய தினம் (02.12), திங்கள்,... Read more »

அதானியின் மன்னார் காற்றாலை மின் திட்டம் நிறுத்தம்

இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் நிறுவனங்களால் ஆரம்பிக்கப்படவிருந்த மன்னார் காற்றாலை மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க குறிப்பிட்டதாக இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார். அத்துடன் குறித்த நிறுவனத்தை விட குறைந்த விலையில் மின்சாரம்... Read more »

பாதிப்படைந்த மக்களின் வாழ்வை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். -சரோஜா சாவித்திரி போல் ராஜ்.

அரசாங்கம் என்ற வகையில் சீரற்ற கால நிலையினால் பாதிப்டைந்துள்ள மக்களின் வாழ்வை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ். தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(01.12) ஞாயிறு, மன்னாருக்கு வருகை தந்து, சீரற்ற காலநிலையால்,  பாதிக்கப்பட்டு... Read more »