யாழில்  திரிபோசா விநியோகத்தில் ஊழலா? உயர் அதிகாரிகளின் செல்வாக்குடன் பைகள் திருட்டு 

யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளின் கீழ் வழங்கப்படும் குழந்தைகளுக்கான திரிபோசா சத்து உணவு வழங்கலில் முறைகேடுகள் இடம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . யாழ் மாவட்டத்திற்கு என சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரிபோசா ஒரு மாதத்திற்கு விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில்... Read more »

சமஷ்டி வேண்டுமா? ஒற்றையாட்சி வேண்டுமா? சர்வஜன வாக்கெடுப்பு நடத்த கோரினார் கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இன்றைய ( 21/07/2023) பாராளுமன்ற உரையின் ஒரு பகுதி தமிழ் அரசியல்வாதிகள் தேவையில்லாமல் சமஷ்டியை கோருவதை நிறுத்த வேண்டும் , அப்படி சமஷ்டியை கேட்பது பிரிவினைவாதம் , அதனால் அமைதியாக இருக்கும் சிங்கள இளைஞர்களை... Read more »
Ad Widget

வடக்கில் அதிகரிக்கும் முறையற்ற திருமணங்கள்! பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ஆளுநர் நடவடிக்கை!!

வடக்கு மாகாணத்தின் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக, மாகாண மகளிர் விவகார அமைச்சு, சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளார்.... Read more »

தலைமன்னார் – இராமேஸ்வரம் , நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவை இந்தியா- இலங்கை கடல் வழிப்போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் – ரணில்

தலைமன்னார் – இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க... Read more »

மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு   நிதியுதவி 

மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனினால் நிதியுதவி  கையளிப்பு   மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட  100 வறிய மாணவர்களுக்கு ‘ கற்றலுக்கு வறுமை தடை அல்ல... Read more »

வரலாற்றில் முதல் முறை ஜனாதிபதி செயலாளராக பெண் ஒருவர் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான திருமதி சாந்தனி விஜேவர்தன, ஜனாதிபதியின் பதில் செயலாளராக இன்று (20-07-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பெண்... Read more »

தமிழ்க் கட்சிகளை செருப்பால் அடித்து துரத்திய ரணில் – சுகாஷ் சாடல்

ரணில் விக்கிரமசிங்கவின் கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே  செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி  கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்... Read more »

இந்திய இழுவை படகுகள் அடாவடி – அத்துமீறல்; ஒரு நிரந்தரத் தீர்வு எட்ட வேண்டும்! 

இந்திய இழுவை படகுகளின் வருகையும், அவர்களது அடாவடித்தனங்களும், அத்துமீறல்களும் எங்களை பாரிய இன்னல்களுக்குள் தள்ளி இருக்கின்றன. இது சம்பந்தமாக பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள் நடத்தியும் எங்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்ட முடியாத சூழலிலே, அரசாங்கமும் அரச அதிபரும் இதற்கு பெரிதாக செவி... Read more »

விடுதலையான தமிழ் அரசியல் கைதிகளுடன் குரலற்றவர்களின் குரல் அமைப்பு சந்திப்பு

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் 18/07/2023 அன்று ஜனாதிபதியின் விஷேட பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, மருதநகரைச் சேர்ந்த 69 வயதுடைய செல்லையா நவரட்ணம் மற்றும் யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த 56 வயதுடைய சண்முகரட்ணம் சண்முகராஜா ஆகியோரே இவ்வாறு பொதுமன்னிப்பளித்து... Read more »

யாழ். பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மகனின் பட்டத்தை கண்ணீரோடு பெற்ற தாய்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழாவில் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவர் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் உயிருடன்... Read more »