மயிலிட்டி துறைமுக பிரச்சினைக்கு டக்ளஸ் தீர்வு

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் நீண்ட நாட்கள் தரித்து வைக்கப்படும் நீண்ட நாள் மீன்பிடிக் கலன்கள் மற்றும் இழுவைமடிப் படகுகளால், உள்ளூர் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகளுக்கு இடையூறுகளை எதிர்கொள்வதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிடப்பட்ட நிலையில், குறித்த... Read more »

ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம்

ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம் – நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்விச் சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை! ஆரம்ப பாடசாலைகளுக்கான உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை மற்றும் நியமனம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்விச் சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.... Read more »
Ad Widget

நடைமுறை சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலை எரியூட்டி

சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து உச்சபட்சமான நன்மைகளை பெற்ற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து! பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக்கொள்ள... Read more »

வட்டு இளைஞன் படுகொலை: சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு... Read more »

கோடிக்கணக்கான உருளைக்கிழங்குகள் எரியூட்டல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. இந்நிலையில், உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மட்ட விசாரணைக் குழுவை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,... Read more »

வலி. வடக்கின் 07 ஆலயங்களில் வழிபட அனுமதி

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய... Read more »

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை பகுதியில் பதற்றம்

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டு,... Read more »

யாழ்.பல்கலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பில் அசமந்தமான போக்கினை உடன் நிறுத்தி, தரமான சேவையை மக்களுக்கு வழங்க, இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கு என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப்... Read more »

யாழ் மீசாலையில் சொகுசு பஸ் மோதி ஒருவர் மரணம்.

A9 வீதி யாழ் மீசாலைப்பகுதியில் இபோச சபை பேரூந்தை சொகுசு பேருந்து முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதில் மோட்டார்சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. Read more »

விமான நிலையத்தில் பிடிபட்ட கனடா விசிட் விசா

நிர்மலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் வெளிநாட்டு கனவில் திரிந்து வந்த நிலையில் தற்போது பரவலாக வழங்கப்பட்டு வரும் கனடா விசிட் விசாவை பயன்படுத்தி கனடா செல்ல திட்டமிட்டார். அதற்கு வசதியாக அவரின் தாயாரின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளின் குடும்பம் கனடாவில் வசித்து... Read more »