இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனுக்காக நாட்டில் சட்டம் ஒன்று திருத்தப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 800 என்னும் திரைப்படத்தை சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபன சட்டத்தின்படி... Read more »
இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தசுன் ஷானக்க இன்று (20.09.2023) காலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர்... Read more »
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துமுடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்த இறுதி போட்டியில் இந்திய அணி படைத்துள்ள சாதனைகள் பின்வருமாறு, இந்திய அணி தனது... Read more »
எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘800’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்... Read more »
டென்மார்க் வாழ் ஈழத்தமிழரான சஞ்சீவ் மனோகரன் அவர்கள் நோர்வேயின் முதல்த்தர வரிசையில் விளையாடும் கழக்கங்களில் ஒன்றான FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் தற்காலிய முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு (10-01- 2022) முதல் இக் கழகத்தின் அகாடமி வளரிச்சியின் தலைவராக பணியாற்றி... Read more »
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை எதிர்க்கொண்ட இந்தியா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது, இதன்மூலம் இந்தியா அணி 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு... Read more »
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்திருத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெஞ்சுவலி காரணமாக சச்சித்ர சேனாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.... Read more »
கேண்டி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப் பரிட்சை நடத்தியது இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கை வீரர் நிஷாங்கா மற்றும் கருணரத்னே... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்குக் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த குசல் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகிய இரண்டு... Read more »
இலங்கையின் நட்சத்திர வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தாம் இலங்கையின் வலைப்பந்தாட்ட துறையில் பல்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு தற்பொழுது 45 வயதாகின்றது எனவும், ஆசியாவில் வேறு எந்த ஒரு பெண் வீராங்கனையும்... Read more »

