லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

12.5 கிலோ கிராம் உள்நாட்டு சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என Litro தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்தின் அடிப்படையில் புதிய விலை நாளை காலை அறிவிக்கப்படும்... Read more »

கொழும்பில் தாழிறங்கிய வீதி!

கொழும்பு- வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வெள்ளவத்தையில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மரைன் டிரைவ் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு... Read more »
Ad Widget

கொழும்பில் அதிரடி படையினர் குவிப்பு

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது மீண்டும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. Read more »

சீனி கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பல்பொருள் அங்காடிகளில் சீனி வகைகளில் கலப்படம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிகப்பு சீனியுடன் வெள்ளை சினி கலக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து வர்த்தக விவகார அமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென கோரியுள்ளார்.... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது!

சுமார் 28 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்திய நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர்... Read more »

போலியான கையெழுத்தை பயன்படுத்தி பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்கள்

மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரின் போலியான கையெழுத்தைப் பயன்படுத்தி 180 இற்கும் அதிகமான மாணவிகளைப் பெண்கள் பாடசாலையில் இணைத்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக கல்விப் பணிப்பாளர் அவ்வாறாக எந்த பாடசாலை நிர்வாகங்களிடமும்... Read more »

மஞ்சள் விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கடந்த கொவிட் காலத்தில் ஒரு கிலோ மஞ்சள் விதை, உருளைக்கிழங்கின் விலை சுமார் ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. இந்த நாட்களில் மொத்த சந்தையில் பச்சை மஞ்சள் கிலோ 50 ரூபாய்க்கும், சில்லறை விலை கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அத்தோடு மஞ்சள்... Read more »

வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் (03.04.2023) சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக்... Read more »

காதலை ஏற்க்க மறுத்த மாணவி மீது வாள்வெட்டு தாக்குதல்!

கல்ஓயா பிரதேசத்தில் உள்ள தம்ம பாடசாலை (பௌத்த மத அறநெறி) ஒன்றில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்ஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் இயங்கி வரும் தம்ம பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீதே வாள்வெட்டு சம்பவம்... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.... Read more »