இலங்கைக்கு வருகைதரும் மற்றும் இலங்கையில் தங்கியுள்ள அவுஸ்திரேலியர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக அவுஸ்திரேலியர்கள் இலங்கையில் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. அத்துடன்,... Read more »
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் சிரமத்திற்குள்ளாகியுள்ள உயர்தரப் பரீட்சை மாணவர்களைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக்கா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இவ்விரு மாவட்டங்களிலும் சில பிரதேசங்கள்... Read more »
கிங் மற்றும் நில்வளா நதிப் படுக்கைகளின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாகச் சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளில்... Read more »
முச்சக்கர வண்டிக்குள் காயங்களுடன் சடலம் மீட்பு..! பொலிஸார் விசாரணை மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மஹரகம பொலிஸாருக்குக்... Read more »
பள்ளிச் சிறார்களிடையே புகைத்தல் அதிகரிப்பு பள்ளிச் சிறார்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சிறப்பு சுவாச நோய் மருத்துவர் பேராசிரியர் துமிந்த யாசரத்ன தெரிவித்துள்ளார். பெரும்பாலான மாணவர்கள் 14 அல்லது 15 வயதில் சிகரெட்டுகளை முயற்சி செய்யத் தொடங்குகிறார்கள் என்று... Read more »
வெளிநாட்டவர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கு உரிமம் வழங்கல் இடைநிறுத்தம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) ஆனது, இலங்கையில் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு உரிமம் கோரும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு உரிமங்கள் வழங்குவதைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டவர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்காக தற்காலிக... Read more »
எதிர்க்கட்சிகளின் பேரணி – ஒலிபெருக்கிகளை அகற்ற காவல்துறை உத்தரவு !! கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சைகள் (GCE Advanced Level Examinations) தொடர்ந்து நடைபெற்று வருவதைக் காரணம் காட்டி, நுகேகொடையில் இன்று (நவம்பர் 21) நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சிகளின் பேரணிக்காக வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை காவல்துறை... Read more »
Whatsapp ஊடுருவல் மோசடி: மூத்த காவல்துறை அதிகாரி கணக்கு முடக்கி ரூ. 4 லட்சம் கொள்ளை – நைஜீரியர் மீது விசாரணை! மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் Whatsapp கணக்கை ஊடுருவி, சுமார் 400,000 ரூபாயை மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நைஜீரிய நாட்டவர் மீது... Read more »
நுகேகொடையில் அரச எதிர்ப்புப் போராட்டம்: நாடெங்கிலும் இருந்து SLPP ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்பு ! பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு! அரசாங்கத்திற்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் சில ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘மஹஜன ஹண்ட’ (மக்கள் குரல்) பொதுக்கூட்டம் இன்று (21) நுகேகொடை, ஆனந்த சமரகோன்... Read more »
அமைச்சர்களின் ஊடக செயலாளர்களுக்கு இனி ஊடக அடையாள அட்டை இல்லை! அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை (Media ID) வழங்குவதை அரசாங்க தகவல் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பெருமளவான ஊடக... Read more »

