எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கிலேயே 3 நிறுவனங்களுக்கு போட்டித் தன்மையுடன் எரிபொருளள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுபவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், உடனடியாக எரிபொருள் விலை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த... Read more »
நாட்டில் 74 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் இருப்பதை கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டார். இந்த பாடசாலை கட்டிடங்களில் திருத்த வேலைப்பணிகளை மேற்கொள்ள அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் இருந்து இதற்கான பணத்தை எடுத்து பாடசாலைகளின் புனரமைப்புக்கு பயன்படுத்துங்கள். தேஸ்டன் கல்லூரி,... Read more »
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 படகுகளுடன், 22 தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்றிரிவு கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்பரப்பில், கடற்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில், அத்துமீறி... Read more »
நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கபோவதில்லை. சிங்களவர்களும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (6.12.2023) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றுலாத்துறை... Read more »
கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள குறித்த... Read more »
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (2023.12.06) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அதற்கான இணக்கத்தை தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் 150... Read more »
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து “மனுசவி” எனும் புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளன. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய... Read more »
நகர்ப்புற வீடுகளின் உரிமையை அதன் குடியிருப்பாளர்களுக்கே வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், அடுத்த வருடம் முதல் இது தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கூறியுள்ளது. இதற்கமைய, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் அதன் குடியிருப்பாளர்களுக்கே முழுமையாக வழங்கப்படவுள்ளதாக நகர... Read more »
கடுகன்னாவ, ஹெனாவல மாவட்ட வைத்தியசாலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (06) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடுநுவர பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் தற்போது கடுகன்னாவ ஹெனாவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more »
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இந்த கடன் தொகையானது இலங்கையின் வைப்புத்தொகை காப்புறுதித்... Read more »

