அனுரவுக்கு இந்தியா 300 கோடி வழங்கியதா?

பல்வேறு அரசியல் நோக்கங்களின் பகடைகாயாக மாறி தமது கட்சிக்கு அவதூறை ஏற்படுத்த வேண்டாம் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதியிடம் மிக கௌரவமான முறையில் கோரிக்கை விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “குறிப்பாக எனது இந்திய விஜயத்தின் பின்னர்... Read more »

மலைநாட்டில் தொடரும் வறட்சி

மத்திய மலைநாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றது. அந்தவகையில் மவுஸ்ஸாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மவுஸ்ஸாகலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் இன்று காலை... Read more »
Ad Widget

எட்கா உடன்படிக்கை – இலங்கைத் தீவு பதற்றமடையும்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 3ஆம் திகதி தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தத்தின் பிரகாரம் இருநாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு... Read more »

தேர்தலை தவிர்த்தால் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் வீட்டிற்கு செல்வார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எல்லோரும் கூறுவதை போல் தந்திரமானவர் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை எந்தவகையிலும் தவிர்க்க முற்பட்டால்,... Read more »

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahian) இன்று (19) இலங்கை தீவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இன்று இலங்கை வரும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்... Read more »

கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையினை நிறைவு செய்வதே அரசாங்கத்தின் இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன்... Read more »

இந்தியத் தூதுவர் தமிழ் தரப்புடன் உரையாடியது எதற்காக?

சிங்கள அரசியல் கட்சிகளையும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் சந்தித்து வருவரும் இந்தியா, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தனக்குரிய நலன்களை இலங்கையிடம் இருந்து பெற்று வரும் நிலையில் அல்லது அதற்கான பேரம் பேசல்களை நடத்திக் கொண்டு இலங்கைத்தீவை இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதுகின்றதா என்ற கேள்விகள்... Read more »

வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இளைஞர்கள்

திறன்மிக்க இளைஞர்களின் புலம்பெயர்வு காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய வங்கியின் அறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது. திறன்மிக்க இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனை பாதிப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகத் துறையில் சாதகமற்ற போக்குகள்... Read more »

அஜித் ரோஹணவின் கையால் பரிசு வாங்க மறுத்த இளைஞன்

சைக்கிளோட்டப் போட்டியொன்றில் இரண்டாம் பெற்றதற்கான பரிசை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் கையால் வாங்க மறுத்த இளைஞனை பொலிசார் பின்தொடர ஆரம்பித்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற P2P சைக்கிளோட்டப் போட்டியின் 40 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கம்பியூட்டர் மென்பொருள் வல்லுனரான சமீர விஜேபண்டார... Read more »

விடுதலைப் புலிகளுக்கு நான் எதிரானவன் இல்லை’: அதுரலியே தேரர்

தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் கிடையாது என்று அதுரலியே ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார் பொதுநிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், என்னைப் பற்றி பெரும்பாலானவர்கள் நான் சிங்கள இனவாதி, புலிகளுக்கு எதிரானவன் என்று... Read more »