இலங்கை நாடாளுமன்றத்தில் சாந்தனுக்கு அஞ்சலி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்திருந்தார். சாந்தனுக்காக இலங்கை... Read more »

நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அசிட் வீச்சுத் தாக்குதல்

இரத்தினபுரியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மூவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் வைத்தே இன்று அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகன... Read more »
Ad Widget

“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற சதி”

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகம் நாளை வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச, “2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றி... Read more »

பாடசாலை பயிற்சி புத்தகங்களுக்கான வற் வரி குறைப்பு

எதிர்காலத்தில் பெறுமதி சேர் வரியை (VAT) குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) நாடாளுமன்றில் உரையாற்றும் போது, அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது. அதனால், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க... Read more »

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் ரணில்

இலங்கைத் தீவின் அரசியலில் கடந்த நான்கு தசாப்தங்களாக தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளார். 1977ஆம் ஆண்டு முதல் பிரதமர் உட்பட பல அமைச்சுப் பதவிகளை ரணில் விக்ரமசிங்க வகித்த போதும் ஜனாதிபதி பதவி மாத்திரம் அவருக்கு எட்டாக்கணியாக இருந்தது.... Read more »

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நீதி கோரிய கர்தினால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் காணொளி ஊடாக கர்தினால் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட... Read more »

தேசபந்து தென்னகோனின் நியமனம் சட்டத்திற்கு எதிரானது: எரான்

அரசியலமைப்பு பேரவை நியமனங்களுக்கு அனுமதி வழங்கும் போது, அரசியலமைப்பு ரீதியான நடைமுறை இருக்கின்ற போதிலும் பொலிஸ் மா அதிபரின் நியமனத்திற்கு அனுமதி வழங்கும் போது, நடைமுறை மீறப்பட்டுள்ளதால், புதிய பொலிஸ் மா அதிபர் அரசியலமைப்புக்கு அமைவாக நியமிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற... Read more »

புரட்சியாளர்களின் பயங்கரவாதம் பலர் உயிர்களை பறித்தது: சஜித்

நாட்டில் புரட்சி செய்ய முயற்சித்து வருவதாக கூறும் புரட்சியாளர்களின் பயங்கரவாதம் காரணமாக பலர் உயிர்களை இழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். மொனராகலை,புத்தல லுணுகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கில் மாத்திரமல்லாது தெற்கிலும்... Read more »

சிறுமியை வன்புணர்ந்த பூசகருக்கு 20 வருட கடுங்காவல் சிறை

சிறுமியை வன்புணர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூசகருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். குற்றவாளி தனது வீட்டில் ஆலயமொன்றை நடத்தி... Read more »

வெளிநாட்டு மோகம்’: வேலைக்கு சென்ற 476 பேர் உயிரிழப்பு!

வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களில் 476 பேர் 2023ம் ஆண்டு உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கருத்து பல்வேறு நாடுகளில் வசித்து வந்த இலங்கையர்கள், பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 366 பேர் இயற்கை காரணங்களினால் உயிரிழந்துள்ளனர்.... Read more »