சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துடன், எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக்... Read more »

கோட்டாபய எடுத்த தீர்மானம்: கைகழுவிய பசில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த அனைத்துத் தீர்மானங்களுக்கும் அவரே பொறுப்புக்கூற வேண்டும்.‘‘ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். இரசாயன உரத்தை தடை செய்வதற்காக கோட்டாபய எடுத்திருந்த தீர்மானம் குறித்த ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்... Read more »
Ad Widget

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் போட்டியிட கூடாது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது. அதற்காக ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அந்த... Read more »

கொரிய தொழிலை இழக்கும் இலங்கையர்கள்

தொழில் நிமித்தம் கொரியா செல்வதற்காக 100 இலங்கை பணியாளர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட விமானம் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் நூறு பணியாளர்கள் நேற்றுமுன்தினம் (19) இரவு கொரியாவுக்கு... Read more »

பௌத்த பிக்குகள் உட்பட 33 பேர் கைது

முன்னிலை சோஷலிச கட்சி முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது, கைதான 33 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொம்பனித்தெரு பொலிஸார், நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால்... Read more »

ரணில் – பசில் இன்று அவசர சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான முக்கியத்தும் வாய்ந்த சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பிலான விடயங்கள் இந்த சந்திப்பில்... Read more »

பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் மற்றும் சாரதி உட்பட 15 பேர் காயமடைந்த நிலையில், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதியின் கவனக்குறைவு காரணமாக இந்த... Read more »

ரணிலின் முடிவு எதுவாக இருந்தாலும் தயார்

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயாராக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

அரசியலில் இருந்து பௌத்த பிக்குகளை அகற்ற வேண்டும்

பௌத்த பிக்குகளின் அரசியல் தலையீட்டை தடுக்காதவரை, வெடுக்குநாறிமலைச் சம்பவங்களை போன்ற சம்பவங்கள் தொடரும் என சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று... Read more »

ஆகாயம், கடல் மற்றும் தரைவழி இணைப்பு

இந்திய அரசாங்கம் இரு பிராந்தியங்களுக்கிடையில் நில வழித்தடத்தை அமைப்பதற்கான “முதல் நடவடிக்கைகளை” எவ்வாறு முன்னெடுத்துள்ளது என்பதை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விவரித்துள்ளார். இலங்கை – இந்திய சங்கத்தின் வருடாந்த இரவு விருந்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில்... Read more »