இலங்கையின் நிலக்கரி சுரங்கங்களை கையப்படுத்துவது முயற்சியில் இந்தியா

நாட்டின் நிலக்கரி (graphite) சுரங்கத்தை கையகப்படுத்துவது தொடர்பில் இலங்கையுடன் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது. நிலக்கரியின் தேவை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படாத... Read more »

கிராம சேவகர்களுக்கு சம்பள உயர்வு

இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, இலங்கை கிராம சேவையாளர் சேவையை ஸ்தாபிப்பதற்காக, சேவைக்கான அரசியலமைப்பு வரைவு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய கிராம அலுவலரின் அடிப்படை சம்பளம்... Read more »
Ad Widget

மதுவரித் திணைக்களத்திற்கு புதிய கொள்கைகள்: அமைச்சரவையிலும் அங்கீகாரம்

இலங்கை மதுவரித் திணைக்களத்திற்கான வரி நிர்வாக முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களம் வருமானம் ஈட்டுகின்ற திணைக்களமாக இருப்பினும், குறித்த வரி நிர்வாக பணிகளுக்கு ஒத்துழைப்பு... Read more »

இரயிலுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் பலி

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் இரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். காலி – பூஸ்ஸ, பிந்தலிய இரயில் கடவையில் இன்று இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த இரயிலுடனேயே மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 17 முதல்... Read more »

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்: கடுமையாக விமர்சித்துள்ள சரத் வீரசேகர

விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும், இராணுவத்தினரையும் ஏன் நினைவுகூரவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர கேள்வியெழுப்பியுள்ளார். விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்து... Read more »

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளக் கொடுப்பனவு: அமைச்சரவையில் எட்டப்பட்ட முடிவுகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பள அதிகரிப்பை அரசு அறிவித்திருப்பினும், ஒருசில தோட்டக கம்பனிகள் குறித்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென அரசுக்கு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. குறித்த நிலைமையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில்,... Read more »

வட்டவளையில் முறிந்து வீழ்ந்த மரம்

வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் ஹட்டன் – கண்டி பிரதான வீதியூடான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) பகல் இடம்பெற்றுள்ளது. ஹட்டனிலிருந்து கினிகத்தேனை வழியூடாக கண்டி, கொழும்பிற்கு பயணிக்கும் வாகனங்களும் கண்டியிலிருந்து ஹட்டனிற்கு... Read more »

வங்கக்கடலில் உருவாகும் ரீமால் புயல்: இலங்கையை பாதிக்குமா?

வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழையும், எதிர்வரும் 25ஆம் திகதி முதல்... Read more »

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட நோய் எதிர்ப்பு ஊசி ஏற்றப்பட்டதால் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி உயிரிழந்தவர் 31 வயதுடைய ஆண் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17வது வார்டில்... Read more »

அரசியலை தவிர்த்து பாடகரானாரா விமல் வீரவன்ச

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பாடலொன்று இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குறித்த பாடல் வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடலை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவே எழுதி, தனது குரலால் பாடியுள்ளார். வெவ்வேறு மனங்களை கொண்டவர்கள் இந்த மண்ணில்... Read more »